சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில் ரூ. 5-20 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் 1 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.