கடலூர் மாவட்டம் ஆவினங்குடி காவல் நிலையத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வரமாக மருத்துவ விடுப்பில் இருந்த சுந்தரமூர்த்தி நேற்று அரசு பேருந்தில் பணிக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் ஆவினங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்குவதற்காக இரண்டு பைகளை எடுத்துக்கொண்டு சுந்தரமூர்த்தி படிக்கட்டின் அருகே வந்த போது நிலைதடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து கீழே விழுந்தார்.

இதனால் முகத்தில் படுகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சுந்தரமூர்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.