என் மண், என் மக்கள்  யாத்திரையில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,  இன்னைக்கு உள்ள  அமைச்சர்கள் வெறும் பொய்யா பேசுகிறார்கள். பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயா  கிட்ட பொய் பேசுறாங்க. நரேந்திர மோடி ஐயா திருச்சியில் மேடையிலே இருக்கிறார். உடனே ஸ்டாலின் அவர்கள் சொல்கிறார். தமிழ்நாட்டில் எதுவுமே வர மாட்டேங்குது…

கொஞ்சம் பார்த்து பண்ணுங்க ஐயா….  எப்பவுமே ஒன்றியம் என்று சொல்வார்கள்.  ஆனால் இப்போது பாரதம். 2024இல் யார்  ஆட்சிக்கு வாரங்க என்பது தெரியும். அதனால் ஒன்றியத்திலிருந்து டைவடிச்சு மாத்துடா பாரதத்தை….  இப்போ எப்படி நிக்குறாங்களோ, 90 டிகிரி குனிஞ்சு நிப்பாங்க.

மார்ச்சில் மோடி ஐயா வந்தாங்கன்னா 135 டிகிரி குனிஞ்சி நிப்பாங்க. ஏப்ரலில் மோடி ஐயா தமிழகத்துக்கு வந்தார்கள் என்றால் ? சாஸ்டாகமாக விழுந்திருப்பார்கள்.  அவர்களுக்கு தெரியும் இந்திய மக்களும்,  தமிழக மக்களும் எங்கே இருக்கிறார்கள்.   தமிழ்நாடு தனிநாடு என்று சொன்னவர்கள்….  ஒன்றிய அரசு என்று சொன்னவர்கள், இன்றைக்கு பாரத பிரதமர் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்.

மேடையிலேயே நம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கேட்கிறார்.. ஏன்  தமிழ்நாட்டில் எதுவுமே கொடுக்கவில்லையே என்று….  மோடி ஐயா பிறகு மைக்கை பிடித்தார்கள். அவர்கள் சொன்னார்கள்…. மோடி ஐயாவை பற்றி உங்களுக்கு தெரியும். மிகவும் நாகரிகமாக அரசியல் பேசக்கூடிய, அற்புதமான மனிதர் என தெரிவித்தார்.