ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 9ம் தேதி அன்று ஆர்யன்(5) என்ற சிறுவன் வயலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். இதுகுறித்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த மீட்பு படையினர், சிறுவனை மீட்கும் படியில் பணியில் 2 நாட்களாக ஈடுபட்டனர். முதலில் ஆழ்துளை கிணற்றில் இருக்கும் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்க குழாய் மூலம் ஆக்ஸிஜனை அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது அசைவு மற்றும் நடவடிக்கைகளை கண்காணிக்க கேமராக்களையும் குழிக்குள் இறக்கினர். இந்நிலையில் கிணற்றில் துளையிடும் எந்திரங்களை பயன்படுத்தி குழிகள் தோண்டப்பட்டு, வீரர்கள் குழிக்குள் இறங்கினர். அதன் பின் சுமார் 55 மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர், சிறுவனை மீட்பு படையினர் உயிரோடு மீட்டனர். இதைத்தொடர்ந்து சிறுவன் மயக்கம் அடைந்த நிலையில், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.