சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி தவறான கருத்துக்கள் பரவி வருவதாக நடிகர் ஆர் கே சுரேஷ் கூறியுள்ளார். காடுவெட்டி பட நிகழ்ச்சியில் பேசிய அவர், லுக் அவுட் நோட்டீஸ் கொடுத்து என்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி, ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 15 வருடங்களாக நான் பட்ட கஷ்டம் என்ன ஆவது? நான் மோசடி செய்வேனா? நான் எது பேசினாலும் தவறாகி விடுகிறது என தெரிவித்துள்ளார்.