தெற்கு ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாடு அமைந்துள்ளது. கடந்த 1990 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனிநாடாக நமீபியா மாறியது. அப்போது அந்த நாட்டின் முதல் அதிபராக சாம் நுஜாமோ பொறுப்பேற்றார். இவர் 15 வருடங்களாக அந்த நாட்டின் அதிபராக இருந்த நிலையில் பின்னர் அரசியலில் இருந்து விலகி தன்னுடைய குடும்பத்தினருடன் மட்டும் இருந்தார்.

இவருக்கு தற்போது 97 வயது ஆகும் நிலையில் உடல்நல குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் காலமானார். இவர் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து கறுப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். மேலும் இவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.