சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடாளுமன்றத்தில் 145 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல செயலாளர் ஜி நாராயணன் பங்கேற்றார்.

மேலும் நிர்வாகிகள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோன்று பெரியார் சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் கருப்பையா தலைமை வகித்தார்.