புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புங்கினிபட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்(23) என்ற மகன் உள்ளார். இவருக்கும் விஜயன்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் புங்கினிப்பட்டி திரௌபதி அம்மன் கோவில் அருகே இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

இதனால் அஜித், தங்கவேல், பொன்னுசாமி, முருகேசன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.