திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பள்ளி கட்டிடத்திற்கான பூமி பூஜை விழாவில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கலந்து கொண்டார். எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பூமி பூஜை விழாவினை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உங்களுக்கு இலவச பேருந்து திட்டம் என்ற ஒரு திட்டம் இருக்கிறது. தனியாருக்கு பேருந்துகளை விடுவதன் மூலம் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணிக்க முடியுமா.?

திமுக அரசு பெண்களுக்காக கொண்டுவந்த இலவச பேருந்து திட்டத்தை முடக்குவதற்கு இந்த அரசு வழிவகை செய்கிறது. அதன்பிறகு 20 பெண்கள் பயணிக்கும் பேருந்தில் 50 பெண்கள் பயணம் செய்ததாக போலி கணக்கு காண்பித்துள்ளனர். போக்குவரத்து துறையில் 1300 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. மேலும் போக்குவரத்து துறை அமைச்சரால் பெண்கள் இலவச பேருந்து பயணம் குறித்து வெள்ளை அறிக்கை விட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்…