கடந்த சில நாட்களாகவே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனந்தரம் கிராமத்தை சேர்ந்த நிஹாரிக்கா என்ற 13 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சுவலி இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தொடர்ந்து வாந்தி எடுக்க ஆரம்பித்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.