நடிகை விஜயலட்சுமி சீமான் மீது அளித்திருந்த புகாரை வாபஸ் பெற்றிருந்த நிலையில் , சீமான் இன்று  விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித் த நிலையில் ஆஜரானார்.  காவல் நிலையத்தில் ஆஜரான பின் பேசிய சீமான், 2 பெண்களால் 13 ஆண்டுகளாக வழக்கு என்ற பெயரில் நான்தான் வன்கொடுமைக்கு ஆளானேன் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெண் வன்கொடுமையை பேசுபவர்கள், ஆண்களுக்கு நிகழும் வன்கொடுமை குறித்தும் பேசுங்கள். விஜயலட்சுமி புகார் தொடர்பாக விளக்கம் அளித்து விட்டேன். என் மீது களங்கம் ஏற்படுத்திய வீரலட்சுமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்