அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஓரிரு வாரத்தில் வெளியிடப்படும் என மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக முழுவதும் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில், தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மற்ற விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகிறது.

எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வில் கேள்விகள் மிக கடினமாக கேட்கப்பட்டிருந்ததால் மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மதிப்பெண்ணை இருவதில் இருந்து 15 ஆக குறைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.