தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய ஜூன் 12 அதாவது நாளை வரை அவகாசம் என்று தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் செய்து அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மதிப்பேன் சான்றிதழ் அச்சிட்ட பிறகு சான்றிதழில் திருத்தம் செய்யப்படாது என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.