தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு  மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து  நேற்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர்  ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டத்தின் கீழ், நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ மகளிர், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணிபுரியும் மகளிர், கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் மகளிர், சிறிய கடைகளில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என கூறப்படுகிறது.