தமிழகத்தில் கடந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெற்ற நிலையில், விடைத்தாள்கள் திருத்தும் பணியின்போது விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரியாக மதிப்பீடு செய்யவில்லை என புகார் எழுந்த எழுந்தது. இந்நிலையில் தற்போது, அதுதொடர்பாக 1,000 ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்கு அரசு தேர்வுகள் துறை பரிந்துரை வழங்கியுள்ளது.

10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தேர்வு கண்காணிப்பு, விடைத்தாள் மதிப்பீடு உள்ளிட்ட எந்தப் பணியிலும் அவர்களை ஈடுபடுத்தக் கூடாது என எச்சரித்துள்ளது.