சென்னை கொளத்தூரில் வசித்து வரும் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முகில் சந்திராவுக்கு மாவோயிஸ்டுகள் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு சோதனை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐ ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் சிலரது வீட்டில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.