ஈரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் ஆய்வு ஒன்று நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மக்களை கவர்ந்த நகரங்களை பட்டியலிடுவது தொடர்பான ஆய்வாக்கும். இதன் மூலம் முதல் 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. பொருளாதாரம், தொழில் துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு, நிலத்தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பாரிஸ் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

மெட்ரிக் 2வது இடத்திலும், டோக்கியோ 3வது இடத்திலும், ரோம் 4வது இடத்திலும், மிலன் 5வது இடத்திலும், உள்ளன. நியூயார்க் 6, ஆம்ஸ்டர்டாம் 7, சிட்னி 8, சிங்கப்பூர் 9, பார்சிலோனா 10 உள்ளது. இதுதான் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடாகும். இந்தியாவை பொருத்தவரையில் டெல்லி மட்டுமே முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. அதாவது டெல்லி 74வது இடத்தை பெற்றுள்ளது. கடைசி இடத்தில் பெயரோ உள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிகமாக வரும் பயணிகளை பொருத்தவரை பாங்காங் முதலிடத்திலும், இஸ்தான்புல் 2ம் இடத்திலும், லண்டன் 3ம் இடத்திலும், ஹாங்காங் 4ம் இடத்திலும், மெக்கா 5ம் இடத்திலும் உள்ளது. இதையடுத்து அன்டால்யா 6வது இடத்திலும், துபாய் 7வது இடத்திலும், மெக்கா 8வது இடத்திலும், பாரிஸ் 9வது இடத்திலும், கோலாலம்பூர் 10வது இடத்திலும் உள்ளது.