பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், குண்டு வைத்து மக்கள் பலரை கொன்றவர்களை எல்லாம் அரசியலுக்காக விடுதலை செய்ய துடிக்கும் திமுக, பாஜக கொடிக்கம்பத்தை நள்ளிரவில் அகற்றுகிறது. தீவிரவாதிகளை கைது செய்வது போல போலீசார் பாஜகவினரை கைது செய்துள்ளனர். நவம்பர் முதல் நாளிலிருந்து அடுத்த 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.