தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.  கமலை வைத்து விக்ரம் என்ற பெரிய ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜிடம், அவரது அடுத்த படங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 படங்கள் மட்டும் இயக்கிவிட்டு திரைத்துறைக்கு குட்பை சொல்லிவிடுவேன் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியிருக்கிறார்.

மாநகரம் திரைப்படம் மூலம் திரைப்பயணத்தை தொடங்கியவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார். அடுத்ததாக விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கிவரும் அவர் அதிக படங்கள் இயக்க விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.