தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்தத் துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அரசாணை பிறப்பித்தது. இந்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு காவல்துறையைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு அத்துறையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி
தீர்ப்பு வழங்கியுள்ளது.