புனேவில் 10வது தளத்தில் இருந்து திடீரென லிஃப்ட் அறுந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே மாநிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நேற்று 10வது தளத்தில் இருந்து திடீரென லிஃப்ட் அறுந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை என கூறப்படுகிறது. அதன்படி, குழந்தைகள் வெளியே இறங்கிய சில நொடிகளில் லிஃப்ட் விழுந்ததால், நூலிழையில் தப்பியுள்ளனர்.

மேலும், கட்டுமான ஒப்பந்ததாரர் மற்றும் லிஃப்டை பராமரிக்கும் பணியை முறையாக செய்யாத ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது புனே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.