லண்டனில் வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ஒரு லட்சம் பணியாளர்கள் பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இருக்கும் பொது மற்றும் வர்த்தக சேவை அமைப்பானது, பணி நிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. அந்த அமைப்பில் அரசாங்க பணியாளர்களும் மற்ற துறையை சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில், வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி அன்று ஒரு லட்சம் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

வேலை நீக்க விதிமுறைகள், ஓய்வூதியம், ஊதிய விகிதம், பணி பாதுகாப்பு போன்றவற்றில் பணியாளர்களுக்கு பாதுகாப்பிற்கான உத்தரவாதம் வழங்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த போராட்டத்திற்காக ஒன்று கூடுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.