ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான  அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பை அறிவித்தது.  தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு.

அதன்படி தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதால் ரூபாய் 238.92 கோடி செலவினம் ஏற்படும். மேலும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..