தமிழகத்தில் வெள்ளம் பாதித்த நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 92 சதவீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ள நிலையில் 6000 ரூபாய் நிவாரணம் பெறுவதற்கு ஜனவரி 3ஆம் தேதி இன்றே கடைசி நாள் என்றும் நிவாரணம் பெறாதவர்கள் நாளைக்குள் ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜனவரி நான்காம் தேதி முதல் வழக்கம் போல ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.