பெங்களூருவை சேர்ந்த பெண் வாகன ஒட்டி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக மிகப்பெரிய அபராத தொகையை கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது வண்டியில் தலைக்கவசம் அணியாமல் சென்றது, போக்குவரத்து விதிகளை மீறியது, இரண்டு நபர்களை ஏற்றி செல்வது என இவை அனைத்திற்கும் மொத்தமாக ரூ.1.36 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது அவர் வைத்திருக்கும்  ஸ்கூட்டர் விலையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில் மொத்தம் 270 முறை அவர் போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார்.