தெலுங்கானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தற்போது எதிர்கட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் நாடு முழுவதும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வருகின்ற மே 13-ஆம் தேதி தெலுங்கானாவில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.‌

இந்நிலையில் சந்திரசேகர ராவின் வீடு பஞ்ஜாரா கில்ஸின் நந்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது. இவருடைய வீட்டின் அருகே உள்ள மைதானத்தில் நேற்று எலுமிச்சை பழம், குங்குமம், மஞ்சள், பொம்மை  போன்ற பொருட்களினால் பில்லி சூனியம் வைக்கப்பட்டது போன்று கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இடத்தில் பொருட்களை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.