தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இத திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு நாங்கள் படாத பாடு படுகிறோம் என்று அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உதவித்தொகை கிடைக்காத சில பெண்கள் விழாக்களுக்கு சென்றால் எங்களை படுத்தும் பாட்டில் இருந்து தப்பித்து ஓடி வருவதே பெரும் பாடாக உள்ளது. அதுவும் கிராமப்புற பெண்கள் தங்களுக்கு வழங்கப்படாத அரியர் தொகையையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று கூறுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.