ஹூப்ளி மற்றும் தஞ்சாவூர் இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தஞ்சாவூருக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் இரவு 8.25 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரயில் தொடர்ந்து மே 1, 8, 15, 22, 29ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எனவும் மறு மார்க்கமாக தஞ்சாவூரில் இருந்து ஹூப்ளிக்கு செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 7.40 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மே 2, 9, 16, 23, 30ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவு பயணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருவதாக பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.