ஒடிஷா மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் ஹாஸ்டல் உணவில் இறந்த தவளை கிடந்ததை மாணவர் ஒருவர் சுட்டிக்காட்டிய சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ‘கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி (KIIT)’ என்ற கல்லூரியின் ஹாஸ்டல் உணவில் இறந்த தவளை ஒன்று கிடந்துள்ளது. இதனை ஒரு மாணவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், அந்த மெஸ் நிறுவனத்திற்கு ஒருநாள் கட்டண பிடித்தம் செய்வதாக கல்லூரி அறிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.