பீகார் மாநிலத்தில் கல்வி முறை குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருவது வழக்கமாகிவிட்டது. சில நேரங்களில் தேர்வு எழுதும் போது திருட்டு, பேப்பர் கசிவு மற்றும் தேர்வு அறையில் ஆபாசமான போர்ஜூரி பாடல்களை பார்ப்பது மற்றும் தேர்வு எழுதும் பல வீடியோக்கள் ஏற்கனவே வைரலானது. இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பள்ளி ஆசிரியர் தன்னுடைய மொபைலை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருக்க மாணவர்கள் ஆசிரியரின் தலையில் இருந்து பேன்களை வெளியே எடுத்து அவருக்கு மசாஜ் செய்து விடுகிறார்கள்.

குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்காமல் ஆசிரியர்கள் இப்படி செய்வது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் ஆசிரியரின் தலையில் உள்ள பேன்களை அகற்றி தலையில் மசாஜ் செய்வது பலரின் கண்டனங்களை பெற்றுள்ளது. இதனை பார்க்கும் போது பீகாரில் கல்வி முறையின் நிலை என்ன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தற்போது இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.