மத்திய பிரதேச மாநிலத்தில் ஷாடோல் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கிருந்து 177 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜபால்பூர் என்ற பகுதிக்கு 90 வயது மூதாட்டி சென்றுள்ளார். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மூதாட்டியை செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி பைக்கில் ஏற்றி சென்றுள்ளார்.

அதன் பிறகு திடீரென பைக்கை பந்த்வாபடா என்ற பகுதியில் நிறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் 90 வயது மூதாட்டியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.