மதிமுக எம்பி கணேசமூர்த்தி தற்கொலை குறித்து வைகோ பரபரப்பு பேட்டியளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை செய்ததாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, “சீட்டு விவகாரத்தில் கணேசமூர்த்தி மகிழ்ச்சியாகவே இருந்தார். 2 முறை என்னை சந்தித்து பேசினார். ஆனால் இதுபோல ஒரு முடிவை அவர் எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்