தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நமக்கு ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் காசு கொடு என கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கள்ளக்குறிச்சி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், நம்மை கண்டுகொள்ளாதவர்களை விட்டு விடுங்கள், நமக்கு ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் காசு கொடுங்கள் என பேசினார். இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர் குமரகுரு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.