வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன், அதில் தவறு இல்லை என நடிகை குஷ்பூ விளக்கம் கொடுத்துள்ளார்..

சென்னை விமான நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார், அப்போது அவர், நான் அந்த மாதிரி பேசவே இல்ல, நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். சேரி வந்து கவர்மெண்ட் ரெக்கார்டுல சேரி என்ற வார்த்தை இருக்கிறது. கவர்மெண்ட் ரெக்கார்டுல நீங்க பாத்தீங்கன்னா அந்த வார்த்தை இருக்கும். வேளச்சேரி இருக்கு.. அதுக்கு என்னங்க அர்த்தம்.. செம்மஞ்சேரினு இருக்கு.. அதுக்கு உங்ககிட்ட சொல்றேன்.. வேளஏரி கிடையாது. வேளச்சேரி.. அதுக்கு என்ன அர்த்தம் என்னங்க கேக்குறேன்.. நீங்க எல்லாரும் தமிழ் தெரிஞ்சவங்க தானே.. சேரிக்கு என்ன அர்த்தம்? நீங்க எனக்கு விளக்கம் கொடுங்க.. தம்பி நீங்க விளக்கம் கொடுங்க அந்த வார்த்தையால தானே பிரச்சனை வருது எனக்கு தமிழ் தெரியாதுன்னு வச்சுக்கோங்க நீங்க எனக்கு விளக்கம் சொல்லுங்க என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.

மேலும் என்ன பொறுத்த வரை எந்த பகுதியில் வாழ்ற மக்களாக இருந்தாலும் நமக்கு சமமாக பேசி உட்கார்ந்து பேசக்கூடிய வாழ்க்கைல முன்னேறுவதற்கு எல்லா உரிமையும் இருக்கு. அவர்கள் குறிப்பிட்ட ஒரு ஏரியாவில் குறிப்பிட்ட இந்த இடத்தில் வந்தவங்க. தாழ்த்தப்பட்ட மக்கள் அப்படின்னு சொல்லணும்னு நான் விரும்பல. நான் அந்த அர்த்தத்துல சொல்லல.. அந்த அர்த்தத்துல நான் பேசவும் முடியாது. தமிழ்நாட்டில் வந்த இத்தனை வருஷத்துல நான் வேலை செஞ்ச எல்லா இடத்திலும் தெரியும்.  தகாத வார்த்தையில் பயன்படுத்துவதில்லை.. யாரையும் குறை சொல்லி நான் பேசுறது இல்ல.. எல்லாத்துக்கும் என்ன பத்தி எல்லாத்துக்கும் தெரியும்.. புரிஞ்சிக்காதவங்கள பத்தி நான் என்ன பண்ண முடியும்” என்றார்.

அதாவது, நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை, வேளச்சேரி, செம்மஞ்சேரி என இருப்பதைப் போல் சேரி எனக் கூறினேன் அதில் தவறு இல்லை. ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும் போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை தீய சக்தி என்று விமர்சித்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர். எல்லா மக்களும் சமம் தான், நான் எந்த மக்களையும் குறிப்பிட்டு கூறவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவும் நான் கண்டன குரல் கொடுத்தேன். சரியான பதிவிட்டது, பதிவிட்டது தான். பயந்து பதிவை நீக்குவது பின்வாங்குவதெல்லாம் கிடையாது என தெரிவித்துள்ளார்..