பிரபல நடிகரும், ஜோதிடருமான அனுமோகன் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்று கூறியுள்ளார். மேலும் அப்போது இலங்கை எனும் தீவே காணாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது. ஏற்கெனவே, சுனாமி வந்ததால் தான் இலங்கை தனித்து தீவாக காணப்படுகிறது. அடுத்தாண்டு வரும் சுனாமியால் இலங்கை அழிந்துபோகும் என்றார். சமீபத்தில் இந்திய அணி உலகக்கோப்பை வெல்லும் எனக் கூறியதால் இவர் சமூகவலைதளத்தில் ட்ரோல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.