கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சங்கர் (34). கூலித்தொழிலாளியான இவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் ஜெய்சங்கர் ஜெயங்கொண்டம் பகுதிக்கு வேலைக்காக சென்ற போது அங்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் கணவனால் கைவிடப்பட்டு தன்னுடைய 2 மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் ஜெய்சங்கரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகி கள்ளக்காதலை வளர்த்து அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் அவர் மூலமாக அந்த பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் 16 வயது மகளை ஜெய்சங்கர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமான நிலையில் பிரசவத்திற்காக அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது தான் சிறுமி 18 வயதை நிரம்பாதவர் என்பது தெரியவந்தது.

இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த நிலையில் அவர்கள் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் ஜெய்சங்கர் தன்னை பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைத்தொடர்ந்து அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.