சென்னை மாவட்டம் சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெனாசிர் பேகம்(33. இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜாகிர் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். கருத்து வேறுபாடு காரணமாக ஜாகிர் உசேனுக்கும் பேகத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் பேகம் தனியாக வசித்து வருகிறார்.

இவர்களது விவாகரத்து வழக்கு குடும்ப நல்ல நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி பேகம் தனது இருசக்கர வாகனத்தில் தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த மர்ம நபர்கள் இரும்பு ராடால் பேகமை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதனை தடுக்க வந்த பேகமின் தந்தை மீதும் தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது பேகமை தாக்கியவர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் முகமது ஆதில் என்பது தெரியவந்தது.

அவர்களை பிடித்து விசாரித்த போது ஜாகிர் உசேன் கூறியதால் தான் மேகமை அடித்ததாக தெரிவித்துள்ளனர். இதற்காக 30 ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் வாங்கியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய வினோத், முகமது ஆதில், செல்வகணபதி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஜாகீர் உசேன் உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர்.