கர்நாடக தேர்தலுக்காக OPS தரப்பு வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுவை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். ஓபிஎஸ் தரப்பு, இபிஎஸ் தரப்பு இருவரும் அதிமுக என்று குறிப்பிட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இரட்டை இலை இபிஎஸ்-இடம் இருப்பதால் ஓபிஎஸ் வேட்பாளர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவு வேட்பாளர்கள் இருவரும் வாபஸ் பெறுவதாக புகழேந்தி அறிவித்திருக்கிறார்.

மேலும், அதிமுக சார்பில் ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு தாக்கல் செய்ததை எதிர்த்து, இபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.