பாட்னாவின் தீகா காட் பகுதியில் கங்கை நதியில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அங்கே போக்குவரத்து போலீஸ் பணியில் இருந்த தாரா குமாரி என்பவர், ஒரு நொடி கூட யோசிக்காமல் சீருடையுடனேயே பொங்கி வந்த கங்கை நதியில் குதித்தார்.
எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாத சூழலில், தனது உயிரைப் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய இந்த அசாத்திய துணிச்சல், அங்கிருந்தவர்களை வியப்பிலும் பெருமிதத்திலும் ஆழ்த்தியது. தன்னுடைய கடமையையும் தாண்டி, சக மனித உயிரைக் காக்க ஆற்றில் குதித்து போராடிய தாரா குமாரியின் இந்த வீரச் செயலை மக்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
Traffic police are meant to manage roads but duty and humanity have no limits.
At Digha Ghat, Patna, during the tragic drowning incident of two youths in the Ganga, Constable Tara Kumari (No. 3150) showed extraordinary courage. Without any safety gear or waiting for support, she… pic.twitter.com/YE6aJgusr3— The Nalanda Index (@Nalanda_index) February 1, 2026
“நிஜமான ஹீரோ” என்று அவரைப் பாராட்டும் பொதுமக்கள், அவருக்கு வீர விருது வழங்கி கௌரவிக்க வேண்டும் என்று பீகார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆபத்தான நேரத்தில் மற்றவர்கள் தயங்கியபோது, ஒரு பெண் காவலராக அவர் காட்டிய இந்த வீரம், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.
