தமிழகத்தில் வெள்ளம் மற்றும் சுனாமி என அவசரகால நிலைகள் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் மொபைல் போனுக்கு எச்சரிக்கை அபாய ஒலியுடன் கூடிய மெசேஜ் ஒன்று திரையில் தோன்றும். இதனைக் கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகுதியில் பெரு வெள்ளம், சுனாமி மற்றும் நிலநடுக்கம் என எந்த அறிவிப்பு இருந்தாலும் இது போன்ற அவசர அறிவிப்பு வெளியாகும். சோதனை முயற்சியாக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை விளக்கம் அளித்துள்ளது.