இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் விலங்குகள் வீடியோக்கள் அதிகமாக வைரல் ஆகி வரும் நிலையில் அதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே சமயம் வெளியில் நடக்கும் கொடுமைகளும் அவ்வப்போது நொடிப்பொழுது இணையத்தில் வீடியோவாக மக்களுக்கு வந்து சேருகிறது.

அதன்படி காளை மாடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் அதனை பார்த்த இளைஞர் நொடிப் பொழுதில் செயல்பட்டு அதனை காப்பாற்றியுள்ளார். இதனை எதிரே நின்று பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளான். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.