தமிழகத்தில் இன்று முதல் ஆறு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமையும் கனமழை வெளுத்து வாங்கும் என்பதால் அன்றும் பல மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்கள் விடுமுறை வரும் என்பதால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.