திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிச்சிப்பட்டி பாண்டியன் நகரில் சின்னழகு என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அம்பிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். நேற்று காலை அம்பிகா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அம்பிகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அம்பிகாவின் தந்தை பிச்சன் காவல் நிலையத்தில் தனது மகளின் சார்பில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.