தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதன் தலைவர் விஜய் அவர்கள் இன்று தனது பெற்றோரான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதற்காகத் தனது இல்லத்திலிருந்து புறப்பட்டார். இவ்வளவு பெரிய அரசியல் மாற்றத்தைப் படைத்த பின்பும், தனது வெற்றியைப் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள அவர் காட்டிய ஆர்வம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
த.வெ.கவின் இமாலய வெற்றிக்கு பின் தனது பெற்றோரிடம் ஆசி பெற இல்லத்திலிருந்து புறப்பட்டார் விஜய்..! வழிநெடுகிலும் பூ மழை தூவி வரவேற்ற தொண்டர்கள்..!!#Neelankarai | #TVKVijay | #TVK | #ElectionResultUpdate | #ElectionResultUpdateWithPolimerNews | #தமிழகசட்டமன்றதேர்தல் |… pic.twitter.com/aCuLxCIWCU
— Polimer News (@polimernews) May 4, 2026
பனையூர் இல்லத்திலிருந்து புறப்பட்ட விஜய், நீலாங்கரையில் உள்ள தனது பெற்றோரின் இல்லத்திற்குச் சென்று, அவர்களின் காலடியில் விழுந்து ஆசி பெற்றார். ஒரு மகனாக இந்த அசுர வெற்றியைத் தனது பெற்றோரிடம் சமர்ப்பித்து அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுத் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளை அவர் தொடங்குகிறார். இந்த உணர்ச்சிகரமான சந்திப்புதான் இன்றைய தேர்தல் கொண்டாட்டங்களுக்கு நடுவே மிகவும் முக்கியமான செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
