பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மின்சார கார்கள் தயாரிப்பில் டாடா மோட்டார்ஸ் முன்னணியில் உள்ளது.

தற்போது புதிய ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா பன்ச் எலக்ட்ரிக் காரை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய காரை வெறும் 21 ஆயிரம் ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்யலாம். தற்போது டாடா மோட்டார் எலக்ட்ரிக் கார் வரிசையில் மற்றொரு புதிய கார் இணைந்துள்ளது. Tata Punch இப்போது Tata Punch EV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Tata Punch Fuel காரின் விலை ரூ.6 லட்சம் ஆகும்.