சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான bmw தனது கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் எனவும் உற்பத்தி செலவுகள் மற்றும் அந்நிய பணமாற்று விகிதங்கள் அதிகரித்துள்ளதால் தான் இந்த விலை உயர்வு என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி சுசுகி, ஹீன்டாய், ஹோண்டா மற்றும் பென்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.