மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில் வேறு கட்சியில் செயல்பட்டு வரும் காரணத்தால் வீரப்பனின் மனைவியும், வித்யா ராணியின் தாயுமான முத்துலட்சுமி அவருக்கு பிரசாரம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளார்.

முத்துலட்சுமி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சியில் செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது. தாயும் மகளும் எதிர் எதிர் கட்சியில் செயல்படுவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.