குரங்குகள் தங்கள் சமூகத்தில் உறுப்பினர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக கூட்டாக ஒருமித்த நடவடிக்கையை எடுப்பது ஒரு முறை மட்டுமல்லாமல் பலமுறை பதிவாகி உள்ளது.

சமீபத்தில் இணையத்தில் வைரலாகியுள்ள ஒரு வீடியோ இதனை மீண்டும் நிரூபிக்கின்றது. வீடியோவில், ஒரு வீட்டு வளாகத்தில் சிக்கிக்கொண்ட குரங்கு குழந்தையை காப்பாற்ற, நூற்றுக்கணக்கான குரங்குகள் குழுவாக வந்து தாக்குதல் நிலைக்கு செல்லும் தைரியமான காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில், ஒரு நபர் தனது உயிரைப் பணயம் வைத்து அந்த குரங்கு குழந்தையை மீட்டுத் தரும் நெஞ்சைக் கட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் jk_forest_joya02 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதைப் பார்த்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பாராட்டுக்களையும், ஆச்சரியத் தெரிவுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Jagmohan Kumar (@jk_forest_joya02)

“>

நிபுணர்களின் கூற்றுப்படி, குரங்குகள் தங்கள் குட்டிகளுடன் அதிக பாசத்தையும், பாதுகாப்பும் அளிக்கும் தன்மையுடையவை. அந்த வகையில், தனது குழந்தைக்குத் திடீர் ஆபத்து ஏற்பட்டதாகக் கருதியதும், குரங்கு கூட்டம் முழுமையாக தாக்குதல் நிலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

வீடியோவின் கடைசி பகுதிகளில், குழந்தையை மீட்ட குரங்குகளின் குழு அமைதியாக திரும்பிச் செல்லும் காட்சி, பார்வையாளர்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது.