கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்த தாயும் குழந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காமண்டபத்தில் ஷமீனா (32) என்ற பெண்ணும் அவருடைய குழந்தையும் பிரசவ சமயத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ரத்த வெள்ளத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாயும் குழந்தையும் உயிரிழந்த நிலையில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்தனர். அவருடைய கணவர் நயாசிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.