நாடாளுமன்ற தேர்தல் தேதியை மார்ச் 9ம் தேதிக்கு பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சலம், சிக்கிம் மற்றும் ஓடிஸா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியையும் வெளியிட முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.